குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று முதல் வட மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுள்ள புதிய அலுவலகத்தினுடாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
