கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இன்று காலை சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட பின்னரே அவர் வைத்திசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, இவர் வைத்தியசாலையிலிருந்து வெளியோறும்போது தனது கையில் ‘Boris Johnson unleashed’ என்ற புத்தகத்தை வைத்திருந்தார்.
2019 இல் தனது மகத்தான தேர்தல் வெற்றியுடன் பிரிட்டிஷ் அரசியலில் ஏற்பட்ட அரசியலமைப்பு மாற்றத்தைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எழுதிய புத்தகமே Unleashed என்பது குறிப்பிடத்தக்கது,
