கசிப்புடன் மோட்டார் சைக்கிள் வருகை தந்த இரண்டு நபர்கள் விபத்து ஏற்படுத்திய டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலே பலி மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி 256 கிலோமீட்டர் பகுதிக்கு முன்பாக பரந்தன் அரச விதை உற்பத்திப் நிலையத்துக்கு முன்பாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ 9 வீதி 256 கிலோமீட்டர் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா சென்ற அரச பேருந்து நிறுத்தப்பட்ட போது பரந்தன் பகுதியில் இருந்து கனரக டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டு இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மேலும் அதே பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் கசிப்புடன் வருகை தந்த நபர்கள் விபத்து ஏற்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ஒரு கட்டுப்பாட்டையில் இருந்து மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி மற்றும் ஒரு நபர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் 1990 அவசர நோயாளர் கவுவண்டி அறிவித்து விபத்தில் காயப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் காயப்பட்ட நபரை சுற்றி பலர் பார்ப்பதும் படம் எடுக்கும் நபர்களாகவே காணப்பட்டார்கள் விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் முயற்சி எந்த நபரும் முன் வரவில்லை காயம் அடைந்த நபரை நோயாள காவு வண்டிக்கு ஏற்றுவதற்கு சில நபர்களிடம் பொலிஸார் உதவிக்கோரியும் எந்த நபரும் முன் வராமல் புகை படமெடுப்பதிலும் கவனம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
