முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போது ரணில் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
