போலி கடற்படை அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்க முயன்ற மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாக்களில் வந்த குறித்த சந்தேக நபர்கள் ஜேர்மனிக்கு பயணிக்கத் தயாராக இருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
