Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உடுவில் பிரதேச செயலகத்தில் விசேட நடமாடும் சேவை

ஆகஸ்ட் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விசேட நடமாடும் சேவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாவும், கெளரவ விருந்தினர்களாக சனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்திரு. துலீப் சேமரத்தன ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் வடக்கு மாகண சபை செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கிளீன் ஸ்ரீலங்கா குழுவினர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வின் இறுதியில் விசேட நிகழ்வாக புதுமணத் தம்பதி ஒருவருக்கான பிறப்புச் சான்றிதழ் முதல் தடவையாக வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பதிவுத் திருமணம் நடைபெற்றதுடன், திருமணப் பதிவுச் சான்றிதழ் உத்தியோகபூர்வமாக அமைச்சர் அவர்களால் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது.

மேலும் புதிதாக பதியப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டது.

இதன்படி பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிக்கான ரயர்களும் பொதுமக்களுக்கான தென்னங்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கண் பரிசோதனை யின் பின்னரான இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உறுதியான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்
அடுத்த செய்தி யாழில் இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தொடரும் நாயாற்று பால திருத்த பணிகள்(Video)

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு -இருவர் கைது

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?