இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 55 சதவீதம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிக்கு உட்பட்டதாக இருக்கும் என்று இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்கு தண்டனையாக, கடந்த வாரம், ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகவும் இது எந்த அமெரிக்க வர்த்தக கூட்டாளியின் மீதும் இல்லாத அதிகபட்ச வரிவிதிப்பதாகவும் தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
