பொரளை, சஹஸ்புர பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கைதுசெய்யப்பட்ட ஷெஹான் மதுஷங்க என்ற சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அதன்படி, சந்தேகநபர் தொடர்பான சாட்சியங்களின் அறிக்கையினை அடுத்த வழக்கு தினத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்
