இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், நெல்லியடி பஸ் நிலையத்தில் இன்று மாலை 7 மணி வரை கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
