வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , மதத் தலங்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை என்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதற்காக வருந்துவதாகவும் இஸ்ரேல் கூறியது.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாம் மிகவும் வருந்துவதாக பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களைத் தாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


