பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்ஷெலில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ஷெல் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீ ஏற்பட்டு பரவியுள்ளதனால் , விமானம், பஸ், ரயில் சேவைகளும் முடங்கியுள்ளதோடு முக்கிய வீதிகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன.
இதேவேளை பிரான்ஸின் 2-வது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல் விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, பிரான்ஸின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினால் 700 ஹெக்டேயர்கள் பரப்பிலான நில பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளதோடு 10 கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.
