திருக்கோணமலை மாவட்டத்தின் மாநகர சபை முதல்வர் தெரிவு இன்று இடம்பெற்றது. இந்நிலையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையின் கீழ் இத் தெரிவு நடைபெற்றது.
இதன்படி மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு இலங்கை தமிழரசி கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரும், உதயகுமார் அஜித்குமாரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது
இதனையடுத்து திருக்கோணமலை மாவட்ட சபை முதல்வராக முதல் இரண்டு வருடங்கள் கந்தசாமி செல்வராஜாவும், அடுத்த வரும் இரண்டு வருடங்கள் முதல்வராக உ. அஜித்குமாரையும் தமிழரசு கட்சி தேர்வு செய்துள்ளது.
