Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இரு நூல்கள் வெளியீட்டு விழா!

மே 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விஜய் படைப்பகத்தின் இரண்டாவது வெளியீட்டு நிகழ்வாக பெரியதம்பி எழுதிய மல்லாவியும் என் மறுபிறவியும், மற்றும் அனுஹரி வன்னி எழுதிய சூழ்நிலைக் கைதி நூல் வெளியீட்டு விழா இன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

மூத்த இலக்கியவாதி தமிழ்மணி, முனைவர் மேழிக்குமரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலாசிரியர்கள் அறிமுக உரை ந.நவரூபனால் மேற்கொள்ளப்பட்டதுடன், நயவுரையினை தமிழாசிரியரும், கவிஞருமான வே.முல்லைத்தீபன் மற்றும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான ந.கபிலநாத் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் நூலாசிரியர்களால் நூல்களின் பிரதிகள் அதிதிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், நூலாசிரியர்களிற்கான கௌரவமளிப்பும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேசிய கல்வியற்கல்லூரி ஓய்வுநிலை பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தமும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி த.நிறைமதி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ஜெ.தட்சாயினி, மற்றும் கௌரவ விருந்தினர்களாக இலக்கிய ஆர்வலர் கலாபூஷணம் நா.தியாகராஜா, எழுத்தாளர் ஆன்மீகச்சுடர் சி.சிவசோதி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

முந்தைய செய்தி யாழில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி !
அடுத்த செய்தி 3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு – மாங்குளம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

Quebec Tamil fest-2025

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

ஏப்ரல் 30, 2025
இலங்கை

யாழில். மணல் அகழ்வதற்கான போலி அனுமதி பத்திரத்துடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கருத்திலிருந்து அரசாங்கம் பின் வாங்க முடியாது – பா.உ கஜேந்திரகுமார்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கனகராயன் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரழப்பு….

மே 26, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?