ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது.
தொழிலாளர்களின் முயற்சிகளைக் கொண்டாடுவதைக் காட்டிலும், இந்த நாள் தொழிலாளர்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தையும், நியாயமான வேலை வாய்ப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் நினைவூட்டுகிறது.
சர்வதேச தொழிலாளர் தினம் என்பது போராட்டம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
139 ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் உரிமைகளுக்காக அன்று இரத்தம் சிந்திய தலைவர்களை சர்வதேச தொழிலாளர் தினமாகிய இன்று நினைவுகூருகின்றோம்.