பலாங்கொடை ருக்மல்கந்துர பகுதியில் குழந்தையொன்று இறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று பின்னோக்கி சென்றபோது, வீட்டில் இருந்த குழந்தை லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை, தெப்பலமுல்ல பகுதியைச் சேர்ந்த லொறியின் சாரதியின் ஒரு வயது ஏழு மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய 39 வயதான குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.