இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் உலகின் முதல் செய்தித்தாள் இது என இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்கு பக்கங்களைக் கொண்ட இல் ஃபோக்லியோ AI செய்தித்தாளானது மெல்லிய அகலத் தாள் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த செய்தித்தாளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் Il Foglio நாளிதழ் நிறுவனம், முற்றுமுழுதாக AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் உலகின் முதல் செய்தித்தாள் இது என இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பக்கங்களைக் கொண்ட Il Foglio AI செய்தித்தாளானது மெல்லிய அகலத்தாள் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் நாட்களில் இந்த AI செய்தித்தாளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன