Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் .மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி புகுந்த சம்பவம்….

மார்ச் 25, 2025
jaffna
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை இனிவரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்துவேன் என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் , கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தர்க்கத்தை தொடர்ந்து இடையில் நிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவு திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் ஆராயும் கூட்டமே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

ஆனால் இன்றைக்கு மிக வேதனைக்கு உரிய விடயம் என்ன என்றால் , அபிவிருத்தி தொடர்பில் பேச வேண்டிய இந்த கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி புகுந்தது போல சில விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாது என கூறி வெளியேறி சென்றுள்ளார். அதேபோல கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு மனவுளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஒரு சில விடயங்களையே என்னால் கட்டுப்படுத்த முடியும். சில விடயங்களை கட்டுப்படுத்த முடியாது. யாருடைய சொற்களையும் , பேச்சுக்களையும் செவிமடுக்க முடியாத நபர்களின் செயற்பாட்டால் கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்பட்ட போதிலும் , மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

எவரையும் பகைத்துக்கொண்டோ , புறக்கணித்துக்கொண்டோ கூட்டத்தை நடாத்த கூடாது என நினைக்கிறேன். ஆனால் நிலைமை மோசமானால் எனக்கு உரிய அதிகாரங்களை கையில் எடுப்பேன், இனிவரும் கூட்டங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.

முந்தைய செய்தி தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடந்த யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்….
அடுத்த செய்தி வவுனியா- புதிய சாளம்பைக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

அக்டோபர் 6, 2024
இலங்கை

விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுக்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
இலங்கைவிசேட செய்திகள்

சிறுவர்களை முறைக்கேடாக பயன்படுத்திய நபரை கட்சியில் இருந்து நீக்கிய தமிழரசு கட்சி

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?