Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்பாட்டம்..

மார்ச் 24, 2025
jaffna
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ‘ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்’ எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கனிஸ்ட சேவையாளர்களின் தொழிலாளர் சங்கம் மற்றும் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவர் இர்பான் ஏற்பாட்டினையடுத்து பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து கச்சேரி வரை பேரணியாக செல்வதற்கு திட்டமிட்ட நிலையில் தேர்தல் விதிமுறையில் செல்வதற்கு பொலிசார் அனுமதி மறுத்ததையடுத்து காந்தி பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து நாட்டில் நிலவும் யானைப் பிரச்சனைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளைப் பராமரிப்பதற்கென நாடு முழுவதும் 4731 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டு, தற்போது வரை 3530 உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமைபுரிகின்றனர். அவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு சுமார் 5 வருடங்கள் ஆகியும் அடிப்படை வசதியின்றி நிரந்தரம் நியமனம் இன்றி இரவு பகலாக இன்று வரை மாதாந்தம் 22 ,500 ரூபாய் பயிற்சி கொடுப்பனவை மாத்திரம் பெற்று கொண்டு கடமையாற்றி வருவதாகவும்,

மனித யானை மோதல்களைக் குறைக்க நாங்களும் பங்களிப்பவர்கள், எங்கள் பிரச்சனை அதிமேதகு ஜனாதிபதிக்கு, எங்கள் பிரச்சனையை ஜனாதிபதி அவர்களால் மாத்திரமே தீர்க்க முடியும், நிரந்தர நியமனம் இன்றி கடந்த 4 வருடங்களாக மாதம் 22 ,500 ரூபாவுக்கு நாங்கள் வேலை, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இந்த ஆர்பாட்டத்தை கண்காணித்து கொண்டதுடன் சுமார் 2 மணித்தியாலம் ஆர்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று பழைய கச்சேரியில் அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.

முந்தைய செய்தி தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்து வைத்த வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்…
அடுத்த செய்தி வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி இடையூறு..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்!

செப்டம்பர் 9, 2024
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்,,,,

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

டிராகன் பழத்தில் உள்ள மகத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள் !

மார்ச் 24, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

கோப்பாய் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 22, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?