இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமும், வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலயமும் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர்சி.வி.கே.சிவஞானம்,எம்.எ.சுமந்திரன்,ப.சத்தியலிங்கம் ஆகியோர் புதிய அலுவலகத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், இ.சாணக்கியன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், மாவட்டகிளையினர் என பலர் கலந்துகொண்டனர்.