சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு , வடக்கின் பெண் உற்பத்தியாளர் விழாவும், கலைவிழாவும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பெண் தொழில் முனைவோரின் உள்ளூர் தயாரிப்புக்கள் , ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள் , ஆடை , ஆபரணங்கள், கைவேலை அலங்கார பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் வடக்கு , கிழக்கு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் , புத்தாக்க நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.