Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகள் தொடர்பான மீளாய்வு.

ஜனவரி 15, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் வரவுப் பதிவேட்டு இயந்திரத்தில் கையொப்பமிடுவது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டது.
மாதத்தில் 14 நாட்கள் வெளிக்கள கடமையில் ஈடுபடுவதுடன், பிரதி திங்கட் கிழமைகளில் வரவு பதிவேட்டு இயந்திரத்தில் கையெழுத்திட்டு அலுவலகக் கடமைகளாற்றவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை, விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களப் பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
அதேவேளை வெளிக்கள கடமைகளைச் சரிவரச் செய்யாத உத்தியோகத்தர்களுக்கும், தவறிழைத்ததாகக் கண்டறியப்படும் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

பதில் கடமையாற்றும் விவசாயப் போதனாசிரியர்களுக்கு அதற்குரிய கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைக் கொடுப்பனவுகளை விரைந்து வழங்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாயத்துறைசார் திட்டங்கள் தொடர்பில் மாகாண விவசாயத் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட திட்டமுன்னெடுப்பு நிறுவனங்கள் கலந்துரையாடவேண்டும் எனவும், அந்தத் திட்டத்தில் பணியாற்றும் வெளிக்களப் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரை ஆளுநர் பணித்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயப் போதனாசிரியர்களுக்கு இடையிலான இடமாற்றத்தை முன்னெடுக்க விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உரிய முறையில் அதைச் செயற்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு கமநலசேவை நிலையங்களுக்கும் (ஏ.பி.சி.) மூத்த விவசாயப் போதனாசிரியர் ஒருவரை பொறுப்பாக நியமிப்பது தொடர்பிலும் அதற்குரிய பொறுப்புக்கள் தொடர்பாகவும் ஆளுநரால் பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பாக பணியாற்றும் வெளிக்களப் பணியாளர்களுக்கு அவர்களுக்கான சேவைகளை மெச்சும் வகையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை காலத்துக்குகாலம் விவசாயப் போதனாசிரியர்களுடன் குறைகேள் சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதைச் செயற்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

முந்தைய செய்தி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு.
அடுத்த செய்தி விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுக்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்.

பிப்ரவரி 16, 2025
1
இலங்கை

மொட்டின் கிளிநொச்சி அமைப்பாளராக மதன்

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி…

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?