குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று (5) வைத்தியர் போல் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் குருணாகல், பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் அடையாள அட்டை காணப்பட்டதுடன், குறித்த வைத்தியக் குழாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.