மொன்றியல் பார்க் அவென்யுவில் டாக்ஸி மோதி உயிரிழந்த தமிழர் சின்னத்தம்பி சிவகுமார் !!
கடந்த 22ம் திகதியன்று அதிகாலை 4:30 மணியளவில் மொன்றியல், பார்க் அவென்யு மற்றும் மில்டன் வீதி சந்திப்புக்கு அன்மித்த பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த 63 வயது நிரம்பிய சின்னத்தம்பி சிவகுமார் என்பவர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் டாக்ஸி மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தியினை கியூபெக் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது, அதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
விபத்தினால் அகால மரணமடைந்த சின்னதம்பி சிவகுமார் அவர்களின் பூதவுடல் எதிர்வருகிற சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிறு மதியம் 1;00 மணிக்கு தகன கிரியைகள் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.