Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் உச்சம் தொடும் வாகன விலை உயர்வு…..

மார்ச் 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் வியத்தகு முறையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி பிரச்சினைகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

CHR அல்லது Vezel போன்ற வாகனங்கள் இலங்கையில் விற்கப்படும் விலையில் உலகின் எந்த நாட்டிலும் விற்கப்படுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு வரி வசூலிக்கும் நாடு வேறு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் ஒரு மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை, நியூசிலாந்திற்கு 20 வீத வரியில் இறக்குமதி செய்கிறோம். அதன் மதிப்பு 12 லட்சம். அதே வாகனத்தை பங்களாதேஷில் 50 வீத வரியுடன் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பு 1.5 மில்லியன் ஆகின்றது.

ஆனால் இலங்கையில் 200 வீதம் வரி விதிக்கப்படுவதால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் இலங்கை மூன்று மில்லியன் ரூபா பெறுமதியுடையதாக மாறுகின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம், தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சட்ட சிக்கல் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட பல வாகனங்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்க அனுமதிக்கப்படவில்லை.

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அந்தத் தடைகளை நீக்கி சமீபத்தில் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, தொடர்புடைய வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சுமார் மூன்று கப்பல்களில் வந்த சுமார் 500 வாகனங்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதியின் கொள்கைகளையே அனுர அரசாங்கம் பின்பற்றுகின்றது – சஜித்!
அடுத்த செய்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

14 ஏக்கர் காணியும் திஸ்ஸ விகாரைக்கே சொந்தம்.

பிப்ரவரி 6, 2025
இலங்கை

யாழ். பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

ஏப்ரல் 25, 2026
இலங்கை

திருகோணமலை பிரச்சினை தொடர்பாக தெளிவுபடுத்திய ‘பா.உ கதிரவேலு சண்முகம்’ குகதாசன்

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?