பொத்துவில் பாணம வீதியின் பசரசேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று சிறுவன் ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து நேற்று (05) மதியம் இடம்பெற்றிருந்ததுடன் அச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வந்த சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து இடம்பெற்ற உடன் ஓட்டுனரையும், சிறுவனையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.
