36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு மக்கள் விடுதலை முன்னணியினால் 36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
இதன் போது அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
