இவ்வருடத்தின் முதல் 07 மாதங்களில் சிறுவர்களை துன்புறுத்துதல் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிறுவர் கர்ப்பம் தொடர்பான 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரை சிறுவர்கள் தொடர்பான 5,461 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளன.
இதில் 4,501 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பானவை மற்றும் 960 முறைப்பாடுகள் சட்டத்துடன் தொடர்பில்லாதவை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், முதல் 07 மாதங்களில் சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 141 முறைப்பாடுகளும் பாலியல் வன்கொடுமை தொடர்பான 330 முறைப்பாடுகள் மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான 32 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறுவர்களை துன்புறுத்தல் தொடர்பாக 1,126 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பில் 125 முறைப்பாடுகளும், இணைய மிரட்டல் தொடர்பாக 81 முறைப்பாடுகளும், தற்கொலை தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
