யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடைய இரு மீனவர்கள் நேற்று கடற்றொழிலுக்கு படகில் சென்ற நிலையில், இதுவரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மீனவர்களை கண்டறிய, உள்ளூர் மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
