யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் ஒருவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார்.
அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 20 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார்.
அதனை அடுத்து , 14 நாட்களுக்கு இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
