Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகல்

ஏப்ரல் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமான மொன்றியல் துறைமுகத்தின் (Port of Montreal) முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுகத்தின் பாரிய விரிவாக்கப் பணிகள் 1.16 பில்லியன் டொலர் பெறுமதியான  நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த துறைமுக நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடங்கள் ஒரு ‘நெருக்கடி நிலை’ என அரசியல் விமர்சகர்களால் வர்ணிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் மொன்றியல் துறைமுக நிர்வாகத்தின் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

மொன்றியல் துறைமுகத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி பால் பேர்ட் (Paul Bird) கடந்த மார்ச் மாதம் விலகியிருந்தார்.

தலைமை நிர்வாக அதிகாரியான ஜூலி காஸ்கன் (Julie Gascon) கடந்த 3 ஆம் திகதி திடீரென தனது பதவியிலிருந்து விலகினார்.

மொன்றியல் துறைமுகத்தின் தலைமை நிதி அதிகாரி அல்பன் ஃபோர்னியர் (Alban Fournier) நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், மொன்றியல் துறைமுக நிர்வாகத்தின் இந்த திடீர் மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக, கனடிய நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக்கான குழு நேற்று ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

விலகிச் சென்ற மூன்று அதிகாரிகளையும் சாட்சியமளிக்க அழைத்துள்ள எதிர்க்கட்சிகள், “விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே விமானியும் உதவி விமானிகளும் வெளியேறுவதைப் போன்றது இது” எனச் சாடியுள்ளனர்.

புதிய அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், துறைமுகத்தின் அன்றாடச் செயல்பாடுகளை, நியமிக்கப்பட்ட ஒரு விசேட குழு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற லிபரல் கட்சி
அடுத்த செய்தி அமைச்சரவையின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்ட்ரியல் ஹியூபர்ட்டில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் கைது

டிசம்பர் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Exo போக்குவரத்து நிறுவனம் ஊழியர் எண்ணிக்கையில் 11 சதவீதத்தைக் குறைக்க முடிவு

ஜனவரி 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் கல்விச் சங்கங்களால் முறைப்பாடு பதிவு

ஜூலை 1, 2025
கியூபெக்

குரோஸ்-ஈல்’ (Grosse-Île) தீவிலுள்ள மான்களை வேட்டையாட திட்டம்

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?