வவுனியா சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று இரவு சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கே மரணம் அடைந்துள்ளார்.
செக்கடிப்புளவில் வசித்து வந்த பவளரத்தினம் செல்வமலர் (56) என்ற பெண் மீது அவரது சகோதர முறையானவர் மது போதையில் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
