நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரிக்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு ஆதரவாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், துப்பாக்கிதாரிகளை கைது செய்யக் கோரியும் இந்தப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.
அதற்கு ஆதரவாக, யாழ்.குடாநாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் மன்றுக்கு வருகைதரவில்லை.
இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்டதோடு, வழக்குகள் திகதியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.