தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சீசன் (2) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்ற மன்னாரைச் சேர்ந்த ஏ.இம்மானுவேலுக்கு அமோக வரவேற்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலத்தடி இல் இருந்து இம்மானுவேலுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் மக்களும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் அதிகாரிகளினால் மாலை அணிவிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.


