சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய ரயில் இரும்பு பாலத்துடன் இணைக்கப்பட்ட நிலப்பரப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. அது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றது.
சிலாபம் போலவத்தை ரயில் பராமரிப்பு பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் ஊழியர்கள் இணைந்து இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
