சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் அதன் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதற்கிடையில், 10 மாவட்டங்களுக்கு மேலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
