நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை 04.00 மணி முதல் நாளை மாலை 04.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


