அயகம பொலிஸ் பிரிவின் கொழும்பேவ பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்தப் பெண் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் 16 வயது மகன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கவரகிரியவைச் சேர்ந்த என தெரிவிக்கப்பட்டுள்ளது அயலவர் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த குற்றம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்ய அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
