மத்திய ஆசிய கைப்பந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை கைப்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2025ம் ஆண்டுக்கான மத்திய ஆசிய மகளிர் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட செம்பியன்ஷிப்பில் இலங்கை இளைஞர் மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இப்போட்டியில், தங்கப் பதக்கம் கிர்கிஸ்தானுக்கும் வெள்ளிப் பதக்கம் நேபாளத்துக்கும் கிடைத்தது. போட்டியின் நிறைவு விழா சமீபத்தில் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் ”சுனில் குமார் கமகே” தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நேபாள தூதுவர் உட்பட பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
