கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீயைக் கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டடுள்ளதுடன், தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
