போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குற்றவாளிகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்துள்ளமை குறித்து எமது செய்திச் சேவை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரலவிடம் வினவிய போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
நாட்டில் கடந்த காலங்களில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கைதுகள் அதிகரித்துள்ளன.
கைது செய்யப்படுபவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டும், சந்தேகத்தின் அடிப்படையிலும் சிறையில் அடைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குற்றவாளிகள், 19,326 பேர் இருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 29,192 ஆக அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
அத்துடன், சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 66,569 பேர் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள், குறைந்த கல்வி அறிவை கொண்டவர்களாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தக் குற்றவாளிகளில் 16 முதல் 22 வயதுக்குட்ட, 1,757 பேரும், 22 முதல் 30 வயதுக்குட்ட 8,491 பேரும் இருக்கின்றனர்.
அத்துடன், 40 வயதுக்குட்பட்ட 8,941 பேரும், 40 முதல் 50 வயதுக்குட்ட 6,046 பேரும், 50க்கும் மேற்பட்ட 3,952 பேரும் குற்றவாளிகளாக இருப்பதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரல எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.


