வெப்பமான வானிலை நிலைமைகள் குறித்து வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 03.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) வரை அமுலாகும் என வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என்றும் அது கூறுகிறது.
