போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை மீண்டும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களிடம் நேபாள இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை மீறி யாரேனும் ஆயுதங்களை வைத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேபாள இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களை அரசு முடக்கியதைக் கண்டித்து அந்த நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், நாடாளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள் எரியூட்டப்பட்டன.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர். இதனையடுத்து, நேபாள அரச அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.
இந்தநிலையில், போராட்டங்களை மாணவர்கள் கைவிட்டுவிட்டு சுமுகமான தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்தெல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் வரலாற்று பாரம்பரியத்தையும், அரசு மற்றும் பொதுச்சொத்துகளை பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் பொதுச் சொத்துகளுக்கு சேதம்
