கிழக்கு உக்ரைனில் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சிகள் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் இருந்தபோதிலும் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு டெலிகிராமில் அதன் துருப்புக்கள் போரிடும் டொனெட்ஸ்க் பகுதியில் “எதிரிகளின் பாதுகாப்புக்குள் ஆழமாக முன்னேறி”, சுகெட்ஸ்கே மற்றும் பன்கிவ்கா கிராமங்களைக் கைப்பற்றியதாகக் தெரிவித்துள்ளது.
அயல் நாடான மத்திய-கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில், நோவோஜோர்கிவ்கா கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
