இரத்தினபுரியில் கிரிஎல்ல பகுதிக்கு உட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை முச்சக்கரவண்டியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
