இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் உள்ள இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, மேலதிக சிகிச்சைக்காக கிரியெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் எபிடவல, கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இவ் விபத்து சம்பவம் தொடர்பாக கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
