நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான விடுமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதன்படி முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.