நாட்டின் மேற்குக் கடற்பரப்பில் 700 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 7 பேரை ஏற்றிச் சென்ற படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த படகிலிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இந்த போதைப்பொருளின் மதிப்பீடு தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.