Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது.

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல், மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து யாழ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த வீட்டினை சுற்றி வளைத்து மேல் வீட்டில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களையும், அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் சிறுமிகளை விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள், கிளிநொச்சி பரந்தன் பகுதி மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவையின் பூதவுடல் – இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை
அடுத்த செய்தி யாழ்.போதனாவின் மகப்பேற்று விடுதி புதிய கட்டடத்தில்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

மார்ச் 10, 2025
இலங்கை

வல்வெட்டித்துறை பொலிஸ் தடுப்பு காவலில் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

டீசலை திருடி விற்பனை செய்த சம்பவத்தில் இருவர் கைது.

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

ஏப்ரல் 20, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?