Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள் வெட்டு.

ஜனவரி 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரின் சகோதரன் உள்ளிட்ட இருவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கொட்டடி பகுதியை சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது- 28) விஜயராசா செந்தூரன் (வயது- 29) ஆகிய இருவர் மீதுமே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

பருத்தித்துறை- கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பெடுத்த நபர் ஒருவர் நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்? என கேட்டு , உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகிறது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

அந்நபர் தொலைபேசியை துண்டித்து, சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்கள் துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று விடயங்களை ஆராந்து பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடமும் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலாளிகளை கைது செய்யுமாறு கோரினர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி ஜனாதிபதி சீன விஜயம் – இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு.
அடுத்த செய்தி யாழ் . குருநகர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை – 06 பேர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். புகைப்பட கண்காட்சி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம்!

ஜூலை 14, 2025
இலங்கை

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?