சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 2 பேர் மொன்றியல் பொலிஸாரால் கைது!!
2023-08-09 09:03
கியூபெக் செய்திகள்
மொன்றியலில் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை, ஆயுதம் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இரு ஆண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய மைக்கேல் அகோஸ்டினோ மற்றும் 24 வயதுடைய கார்ல் ஆண்ட்ரூ டெலடோர் ஆகியோர் இளம் வயது பெண்களை சமூக ஊடகங்கள் மூலமாக கவர்ந்திழுத்து அவர்களை பாலியல் ரீதியான வன்கொடுமைகளை செய்துள்ளனர் .
மேலும் குறித்த நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம் என்றும் மேலும் 514-280-8502 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்றும் மொன்றியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .